நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட ஒரு குழுவினர் சென்று நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். நபிகள் நாயகத்தின் வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டதுபோற் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) ‘முன் பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே, நாம் எங்கே’ என்று சொல்லிக்கொண்டனர்.
|
அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவிற் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்’ என்றார். இன்னொருவர், ‘நான் ஒரு நாட்கூட விடாமற் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்’ என்று கூறினார். மூன்றாம் நபர், ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ள மாட்டேன்’ என்று கூறினார்.
|
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தத் தோழர்களிடம்) வந்து,‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே! அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, எனது வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்’ என்று சொன்னார்கள். [அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி].
|
No comments:
Post a Comment